ஓடியாடும் ஆடு,
வாலாட்டும் நாய்,
சத்தமிடும் குருவி,
பூனை, கோழி
எதுவும் கூடாதாம்
'அடுக்குமாடி குடியிருப்பில்'.
எவரோடும் பழகாத,
எதன் பொருட்டும்
தன்னிருப்பை வெளிப்படுத்தாத
தொட்டிமீன்கள்தான் வேண்டுமாம்
நகரத்து வாழ்விற்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment