ஒவ்வொரு நாளும்
ஆசையாகத்தான் இருக்கிறது
ஏறியவுடன் இருக்கை
கிடைக்க..
ஜன்னலோரமாய் அமர்ந்து
சாலையோர கடைகளை
வேடிக்கை பார்த்து
பள்ளி சிறுமிக்கு கை காட்ட...
இருக்கை கிடைப்பதற்கு
முதலில் வந்தவர்,
நீண்ட நேரமாய் நிற்பவர்
என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது
எவர்க்கருகில் உள்ளவர்
வெளியேறுகிறாரோ
அந்த இடத்தில்
அவரைப் போலவே...
உடல் வியர்த்து,
ஆடை கசங்கி,
தலை கலைந்து
இருக்கை கிடைக்கும்
நேரத்தில்
வந்துவிடுகிறது -
இறங்க வேண்டிய இடம்.
பயமாகத்தானிருக்கிறது
பயணங்கள்
வாழ்க்கையை பிரதிபலிக்கின்றனவா
என்று...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பயணங்கள் முடிவதில்லை. வாழ்த்துக்கள்.
Post a Comment